விருத்தாசலம் அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை


விருத்தாசலம் அருகே    மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

விருத்தாசலம் அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள ராசாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகள் செல்வமீனா(வயது 16). 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் மாணவி செல்வமீனாவை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்க்க பெற்றோர் கூறியதாக தெரிகிறது. ஆனால் செல்வமீனா, நான் தனியார் பள்ளியில் தான் படிப்பேன் என கூறி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரை தனியார் பள்ளியில் சேர்க்க பெற்றோர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வமீனா, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வமீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story