விஷம் குடித்து மாணவி தற்கொலை


விஷம் குடித்து மாணவி தற்கொலை
x

செல்போனில் படம் பார்ப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே வாழவச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் வர்ஷா (வயது 14). இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

வர்ஷா சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த வர்ஷா வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு தாயிடம் கூறினார்.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story