கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு


கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:46 PM GMT)

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார்.

சிவகங்கை

சிவகங்கை அடுத்த கூத்தாண்டன் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். மாவு அரைக்கும் மில் வைத்துள்ளார். இவரது மகன் கலையரசன் (வயது 15). மேல வாணியங்குடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலையில் கலையரசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் மகா சிவனேந்தல் என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி கலையரசன் இறந்துவிட்டார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story