கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி 'திடீர்' சாவு


கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி திடீர் சாவு
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:47 PM GMT)

சுங்கான்கடையில் கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி திடீரென இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

சுங்கான்கடையில் கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி திடீரென இறந்தார்.

கல்லூரி மாணவி

திருவட்டார் அருகே உள்ள செங்கோடி, மாத்தார் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் சுருதி (வயது19). இவர் நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை அறிவியில் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலையில் மாணவி சுருதி வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார். அவர் காலை 9.45 மணியளவில் வகுப்பறையில் இருந்த போது திடீரென மயக்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த ஆசிரியர்களும், சக மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

பரிதாப சாவு

உடனே ஆசிரியர்கள் சுருதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் மாணவியின் சாவுக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கல்லூரி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story