மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் காயம்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் காயம்
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் காயமடைந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த விளாப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் அருண் (வயது 18) நேற்று சிப்காட் பகுதியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி மோதி காயமடைந்தார். லாரியில் இருந்த கிரானைட் கற்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திமிரி சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீஸ்காரர்கள் விஜயகுமார், சிலம்பரசன், மணிகண்டன் ஆகியோர் சாலையில் விழுந்த கற்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story