ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன். இவரது மகன் நவீன்குமார் (வயது20). கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கிட்டம்பட்டி, கொய்யன்கொட்டாயில் உள்ள பனங்காட்டூர் ஏரியில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story