திண்டிவனத்தில் பிளஸ்-1 மாணவி கர்ப்பம் தலைமறைவான ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு


திண்டிவனத்தில்  பிளஸ்-1 மாணவி கர்ப்பம்   தலைமறைவான  ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
x

திண்டிவனத்தில் பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சிறுமியை, திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விக்னேஷ் (வயது 27) என்பவர், சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

அப்போது அவரை காதாலிப்பதாக கூறி திருமண ஆசை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கேட்ட போது, விக்னேஷ் மறுத்துவிட்டார்.


திண்டிவனத்தில்

பிளஸ்-1 மாணவி கர்ப்பம்

தலைமறைவான ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து சிறுமி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் விக்னேசுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் சிறுமியிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பழகி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள விக்னேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story