கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய டிரைவர் போலீஸ் விசாரணை


கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய டிரைவர்  போலீஸ் விசாரணை
x

கல்லூரி மாணவியை டிரைவர் கர்ப்பிணியாக்கினாா். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்


கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்தவர் ராஜா மகன் அப்பு என்கிற விஜய் (வயது 26). டிரைவர். அதே பகுதியை சேர்ந்த ஒருவர், கொரோனா காலம் முதல் அப்புவை தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்க அனுமதி அளித்துள்ளார். அன்று முதல், அப்பு தனக்கு தங்க இடம் தந்தவரின் மகளான 19 வயதுடைய மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

மேலும் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவியும் சம்மதித்ததால், இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும் அப்பு, மாணவியை மொட்டை மாடிக்கு வரவழைத்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடனே அவரை, அவரது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், அவரிடம் விசாரித்தார். அப்போது தான் அப்பு, தன்னை காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.

பின்னர் இதுகுறித்து மாணவி, ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story