காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர் பலியானார்.

தர்மபுரி

பென்னாகரம்

கல்லூரி மாணவர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு மன்னார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் ஆல்வின் சாம் (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆனந்தகுமார் தனது குடும்பத்தினர் 15 பேருடன் சுற்றுலா வேனில் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர்.

உடல் மீட்பு

அப்போது ஆல்வின் சாம் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுதொடர்பாக குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் தண்ணீரில் மூழ்கிய ஆல்பின் சாமின் உடலை மீட்டனர்.

சோகம்

அப்போது அவருடைய உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் ஆல்வின் சாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story