சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை


சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை
x

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவருடைய மகன் சுப்பையா ரமேஷ் (வயது 36). இவர் சட்ட படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்ததுடன், வியாபாரமும் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற ஆதிநாராயணன் நேற்று காலையில் சமாதானபுரம் அருகே இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது சுப்பையா ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story