மாணவர்கள் சாதனை


மாணவர்கள் சாதனை
x

கைப்பந்து போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள், மேலப்பாளையம் அல் மதினா பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் எம்.கே.எம்.செய்யது அகமது கபீர் தலைமை தாங்கினார். செயலாளர் என்ஜினீயர் எஸ்.கே.செய்யது அகமது வரவேற்று பேசினார். போட்டிகளில் பங்கேற்ற அல் மதினா பள்ளி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான போட்டியில் 12 மற்றும் 14 வயது பிரிவுகளில் முதலிடத்தையும், மாணவிகளுக்கான போட்டியில் 12 வயது பிரிவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை புரிந்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் முகமது ரபி, அரசு சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினர். பள்ளி நிர்வாக உறுப்பினர் டாக்டர் முகம்மது இப்ராஹிம் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் டைமண்ட் காதர் மைதீன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், ஒருங்கிணைப்பாளர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story