டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை


டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

தேசிய யோகா போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தென்காசி

தென்காசி:

கரூர் அஜந்தா மகாலில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில், தேசிய யோகா ஸ்போர்ட்ஸ் கிராண்ட் சாம்பியன்ஷிப்-2023 என்ற தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் சாய் கணேஷ், முகிலன் ஆகியோர் முதலிடத்திலும், மாணவர் தருண் பிரசாத், 5-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல்லா, 6-ம் வகுப்பு மாணவர் இஷாந்த் ராகவன் 2-ம் இடத்திலும், 4-ம் வகுப்பு மாணவர் ஆபீக் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story