பிளஸ்-2 தேர்வில் திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


பிளஸ்-2 தேர்வில் திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:46 PM GMT)

பிளஸ்-2 தேர்வில் திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை

திருப்புவனம்

நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 391 மாணவிகளும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 155 மாணவர்களும் தேர்வு எழுதினர். அதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 376 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் கணினி அறிவியலில் ஒரு மாணவியும், கணினி பயன்பாடுகள் பிரிவில் ஒரு மாணவியும், வேதியியல் பிரிவில் ஒரு மாணவியும், வணிகவியல் பிரிவில் 3 மாணவிகளும், கணக்குப்பதிவியல் பிரிவில் 3 மாணவிகளும் என மொத்தம் 9 மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். மாணவி தமிழ்ச்செல்வி 574 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஷோபிகா 568 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், அபிநயா 566 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பெற்றனர். மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை தேவிகாராணி பாராட்டினார்.

இதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 154 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் வணிகவியல் பிரிவில் 2 மாணவர்களும், கணக்கு பதிவியல் பிரிவில் ஒரு மாணவரும் என 3 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவன் இளையராஜா 538 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், புவனேஸ்வரன் 533 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இ்டமும், இளவரசன் 520 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இ்டமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் பாராட்டினார்.


Next Story