அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு

ஆம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் நேற்று திடீரென வெடி சத்தம் கேட்டது. அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடுத்து ஓடினார்கள். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வெடி சத்தம் வந்த இடத்தில் ஆசிரியர்கள் சென்று பார்த்த போது 8-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடித்தது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவர்களிடம் பட்டாசு பொருட்களை பறிமுதல் செய்த ஆசிரியர்கள் மாணவர்களை எச்சரித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து பள்ளிக்கு வந்த ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






