கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x

இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இந்த ஆண்டில் கல்வி உதவித்தொகை புதுப்பிக்கும் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று ஆதார் எண் அளித்து e-KYC verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு இணையதளம் இன்று (புதன்கிழமை) முதல் செயல்படும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ அணுக வேண்டும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story