அரசு பள்ளியில் மண் சுமந்த மாணவ-மாணவிகள்

நாட்டறம்பள்ளி அரசு பள்ளியில் மண் சுமக்கும்பணியில் மாணவ-மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாட்டறம்பள்ளி அதிபெரமனூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் மண் அள்ளி கொட்டும் பணியில் சில ஆசிரியர்கள் ஈடுபடுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 92 மாணவ- மாணவிகள் படித்த நிலையில், இந்த ஆண்டு 60 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவ- மாணவிகளை பள்ளியில் ஆசிரியர்கள் வேலை வாங்கும் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





