ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம்


ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம்
x

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவர். இவரது மகன் வினோத் (வயது 18), பிளஸ்-2 மாணவர். இவருடைய நண்பர் ராசு (20). இவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி காஷ்மீருக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் மூலம் சென்று பின்னர் ஜெயங்கொண்டம் திரும்பி வர முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் காஸ்மீரில் உள்ள கார்கில் பகுதிக்கு நேற்று சைக்கிள் மூலம் சென்று அடைந்தனர்.


Next Story