அரசு கலைக்கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்


அரசு கலைக்கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
x

அரசு கலைக்கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

அரசு கலைக்கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி உள்ளது. சமீபத்தில் வெளியான மெஸ்டர் தேர்வு முடிவுகள் பல்வேறு குளறுபடிகளுடன் வெளிவந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தேர்வு முடிவில் உள்ள குளறுபடிகளை கண்டறிந்து மறுமதிப்பீடு செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று காலை கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவாதாக தெரிவித்து தனியார் பஸ் ஒன்றில் புறப்பட்டு சென்றனர்.


Next Story