சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை


சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை

கோயம்புத்தூர்

கணபதி

கோவை கணபதி அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது மனைவி தெய்வா(வயது 46), மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த தெய்வா விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். அவரை கணேசன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தெய்வா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story