குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x

குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

தலைஞாயிறில் குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் நவீன்குமார், தி.மு.க. பேரூர் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, விதை அலுவலர்கள் ரவி, ஜீவா, உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story