சினிமாவுக்கு அழைத்துச்செல்ல கணவர் மறுத்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சினிமாவுக்கு அழைத்துச்செல்ல கணவர் மறுத்ததால்  பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பொங்கலூர் அருகே சினிமாவுக்கு அழைத்துச்செல்ல கணவர் மறுத்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்

பொங்கலூர்

பொங்கலூர் அருகே சினிமாவுக்கு அழைத்துச்செல்ல கணவர் மறுத்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சினிமாவுக்கு அழைத்துச்செல்ல மறுப்பு

பொங்கலூரை அடுத்த கொடுவாய் வினோபா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவரது மனைவி கவிதா (25). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரமேஷ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கவிதா தனது கணவர் ரமேஷிடம் விக்ரம் சினிமா படத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் கணவர் ரமேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதன் காரணமாக கவிதா மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் கவிதா வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசிபாளையம் போலீசார் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story