கோவை சிறையில் கைதி திடீர் சாவு


கோவை சிறையில் கைதி திடீர் சாவு
x

கோவை சிறையில் கைதி திடீர் சாவு

கோயம்புத்தூர்

கோவை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 37). இவர் ஈமுகோழி பண்ணை நடத்தி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கியதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறை ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story