தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர் திடீரென்று இறந்தார்.
நெல்லை சி.என்.கிராமம் லட்சுமிபுரம் புதுமனை தெருவை சேர்ந்தவர் கேபிரியல் கனகராஜ் (வயது 48). இவர் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் மீண்டும் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கேபிரியல் கனகராஜூக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





