கூலித்தொழிலாளி திடீர் சாவு


கூலித்தொழிலாளி திடீர் சாவு
x

எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி திடீரென இறந்தார்.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே தேவராயபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் பெருமாள் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 10-ந் தேதி காணவில்லை என்று பெருமாள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து 15-ந் தேதி எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்தநிலையில் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி தலைமலை நொச்சிக்கரடு புறம்போக்கு நிலத்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story