கர்ப்பிணி திடீர் சாவு


கர்ப்பிணி திடீர் சாவு
x
தினத்தந்தி 3 Feb 2023 5:18 PM GMT (Updated: 4 Feb 2023 10:21 AM GMT)

ஆற்காடு அருகே கர்ப்பிணி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த வளவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி, விவசாயி. இவரது மனைவி கல்பனா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கல்பனா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. கல்பனாவுக்கு அடிக்கடி வலிப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கல்பனாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே கல்பனா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story