திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

நன்னிலம் பகுதிகளில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
நன்னிலம்:
நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் நன்னிலம், அச்சுதமங்கலம், ஆண்டிப்பந்தல், கங்களாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பருத்தி விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது பருத்திக்கு தண்ணீர் தேவை . இந்த மழை எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இதனால் எங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது என கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





