திடீர் சாலை மறியல்


திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில் அதற்கு முன்னரே பாத்திரம், அடுப்புகளோடு நேற்று கார், வேன் உள்ளிட்ட வேன்களில் பக்தர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆலங்குளம், இடைகால் ஆகிய பகுதிகளில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த பக்தர்களை ஆம்பூர் சோதனை சாவடியில் போலீசார் மறித்தனர். இதனால் பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

1 More update

Next Story