போச்சம்பள்ளி அருகேபிளஸ்-1 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை


போச்சம்பள்ளி அருகேபிளஸ்-1 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
x
கிருஷ்ணகிரி

மத்தூர்

போச்சம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பிளஸ்-1 மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பட்டகப்பட்டியை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெயபிரியா (வயது 16). சிறுமி சந்தூர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளி இடை தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் மனமுடைந்த மாணவி கடந்த 29-ந் தேதி எலி மருந்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாணவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர்

போச்சம்பள்ளி அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (23). இவர் கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story