தேன்கனிக்கோட்டை அருகேபெண் தீக்குளித்து தற்கொலை


தேன்கனிக்கோட்டை அருகேபெண் தீக்குளித்து தற்கொலை
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திருமழிகை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 22). இவர்களுக்கு கடந்த 3½ ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி சம்பவத்தன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 3½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story