சிங்காரப்பேட்டை அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


சிங்காரப்பேட்டை அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே உள்ள கோவிந்தாபுரம் பக்கமுள்ள பால்காரன் கொட்டாயை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story