தேன்கனிக்கோட்டையில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தேன்கனிக்கோட்டையில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தேன்கனிக்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் அருகே உள்ள ஜெயபுரத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் (வயது 26). இவர் ஜெயபுரத்தில் மைராடா திட்டத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாதப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story