புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை


புதுச்சத்திரம் அருகே  பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் பெரும்பாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 6 மகள்கள் இருந்தனர். இதில் 4-வது மகள் சவுமியா (17) ஏளூர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 25-ந் தேதி பள்ளிக்கு சென்ற சவுமியா, தேர்வு எழுதி விட்டு பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பினார். பின்னர் தாயார் ஜெயலட்சுமி, அப்பகுதியில் உள்ள மூத்த மகள் வனிதா வீட்டிற்கு சென்று விட்டார். மாலை 6 மணி அளவில் திரும்பி வந்தபோது சவுமியா விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

விசாரணை

இதையடுத்து மகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் மீட்டு பெரியமணலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சவுமியா அனுமதிக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சவுமியா இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தந்தை ராமசாமி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்து போன மாணவி சவுமியா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததும், நேற்று முன்தினம் வலி தாங்க முடியாத அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story