பரமத்தி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு ‌தற்கொலை


பரமத்தி அருகே  கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு ‌தற்கொலை
x

பரமத்தி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சூர்யா (23). பாபு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே பிள்ளைகளத்தூரில் உள்ள பெரியப்பா வீட்டின் அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். கடந்த 1-ந் தேதி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தார்.

விசாரணை

அப்போது வீட்டில் பாபு துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டதை கண்டு கதறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story