புதுச்சத்திரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


புதுச்சத்திரம் அருகே  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

புதுச்சத்திரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கொளத்துபாளையம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் வினோத் (வயது 28). 9-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் விவசாயம் செய்து வந்தார். கடந்த 6 மாத காலமாக ரிக் வண்டிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 14-ந் தேதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினோத்தை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வினோத் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது தந்தை புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story