பைனான்ஸ் நிறுவன ஊழியர் தற்கொலை


பைனான்ஸ் நிறுவன ஊழியர் தற்கொலை
x

பைனான்ஸ் நிறுவன ஊழியர் தற்கொலை

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்குமார் பைனான்ஸ் நிறுவனம் அருகில் உள்ள குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற பள்ளிபாளையம் போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய மகன் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story