நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


நாமகிரிப்பேட்டை அருகே  தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருேக உள்ள வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கண்ணபிரான் (வயது 27). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கண்ணபிரான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் கண்ணபிரானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கண்ணபிரான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story