பரமத்திவேலூர் அருகே விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை


பரமத்திவேலூர் அருகே  விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:45 PM GMT)

பரமத்திவேலூர் அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தாமணி (35). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மன வேதனை அடைந்த சரவணன் நேற்று முன்தினம் வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்க கூடிய விஷ மாத்திரையை தின்று உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்தார். தகவல் அறிந்து சென்ற வேலூர் போலீசார் சரவணனின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story