அரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு


அரூர் அருகே  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை  உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:45 PM GMT)

அரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி டிரைவர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எல்லை உடையாம்பட்டியை சேர்ந்தவர் கோபி (வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி புஷ்பாவதி (26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கோபிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் புஷ்பாவதி விரக்தியில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் புஷ்பாவதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற அரூர் போலீசார் புஷ்பாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே புஷ்பாவதியின் உறவினர்கள் திடீரென அரூர் அரசு ஆஸ்பத்திரி முன் திரண்டனர். பின்னர் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் ஆஸ்பத்திரி முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story