கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கொல்லிமலையில்  கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:45 PM GMT)

கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வலப்பூர் நாடு ஊராட்சி எளமாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் (வயது 22) என்ற மகன் இருந்தார்.

இவர் சேந்தமங்கலம் அருகே உள்ள கணவாய்மேடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை மகன் மணிகண்டன் கண்டித்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை நிலவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

விசாரணை

இதனால் மனமுடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அறிந்த வலப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பொன்னுதுரை வாழவந்திநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story