பரமத்திவேலூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பரமத்திவேலூர் அருகே  கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மேற்கு தெருவை சேர்ந்தவர் வீரன். இவருடைய மகன் ராமதாஸ் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அனுசுயா (34). ராமதாஸ் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு குணமடையவில்லை என தெரிகிறது.

இதனால் மனமடைந்த நிலையில் இருந்த ராமதாஸ் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் துணியால் தூக்குப்போட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராமதாசை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story