விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை சீதாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 64). இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ராமநாதன் மனைவி கிருஷ்ணவேணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story