விசைத்தறி உரிமையாளர் தற்கொலை


விசைத்தறி உரிமையாளர் தற்கொலை
x

திருச்செங்கோட்டில் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு சட்டையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரது மகன் யுவராஜ் (வயது 38) இவர் விசைத்தறி உரிமையாளர். யுவராஜ் வயதாகியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்றும், தனது தங்கைக்கும் திருமணம் நடக்கவில்லை என்ற மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் யுவராஜ் நேற்று விசைத்தறி பட்டறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்து வந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் யுராஜின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பு வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யுவராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

1 More update

Next Story