சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


சேந்தமங்கலம் அருகே  லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:45 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). அப்பகுதியில் உள்ள ஒரு முட்டை கம்பெனியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ராதேவி (34).

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுந்தரமூர்த்தி நேற்று அவருடைய தாய் வசித்து வரும் கொண்டப்பநாயக்கனூருக்கு சென்றார்.

விசாரணை

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story