கட்டிட தொழிலாளி தற்கொலை


கட்டிட தொழிலாளி தற்கொலை
x
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அடுத்த வெப்படை என்.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி (34). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற வெப்படை போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story