வெப்படை அருகேமூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


வெப்படை அருகேமூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 82). இவருடைய கணவர் இறந்து விட்டதால் பாதரையில் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாவாயி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story