தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2023 7:00 PM GMT (Updated: 25 Jan 2023 9:55 AM GMT)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மனைவி தேவி (வயது 37). இவர் வீட்டில் நடத்தி வந்த ஓட்டல் சரியாக செயல்படாததால் மனம் உடைந்து, வீட்டு அறையில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை சரவணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு தேவியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story