காரிமங்கலம் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே மொட்டலூர் ஊராட்சி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). விவசாயி. இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இவரை கண்ட குடும்பத்தினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்துக்கு ராதிகா என்ற மனைவியும், விதுஷன் என்ற மகனும், மதுஷா என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story