மோகனூர் அருகேபெண் தீக்குளித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை


மோகனூர் அருகேபெண் தீக்குளித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
x
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பெண்

மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மனைவி சரோஜா (வயது 60). பெரியசாமி இறந்துவிட்டதால் சரோஜா என்.புதுப்பட்டியில் உள்ள கணபதி நகரில் வசித்து வருகிறார். இவர்களுடைய மகள் சம்பூர்ணம் (35). இவருக்கும், புதன்சந்தை அருகே மின்னாம்பள்ளி அண்ணா நகரை சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவருடன் சில நாட்கள் குடும்பம் நடத்திய சம்பூர்ணம் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனை தொடர்ந்து சம்பூரணத்தின் மாமனார் ராஜேந்திரன் மருமகளை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

உதவி கலெக்டர் விசாரணை

அதன்படி ராஜேந்திரன் நேற்று முன்தினம் மருமகளை அழைத்து செல்ல வந்தாராம். அப்போது மாமனார் வீட்டுக்கு செல்ல தனக்கு விருப்பமில்லை என சம்பூர்ணம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சம்பூர்ணத்தை தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்ைச பலனின்றி நேற்று சம்பூர்ணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய தாய் சரோஜா மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story