பாப்பாரப்பட்டி அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை


பாப்பாரப்பட்டி அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 12 Feb 2023 7:00 PM GMT (Updated: 12 Feb 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளம்பெண்

பாப்பாரப்பட்டி அருகே உள்ள புதுகரம்பு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 27). இவர் சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். மூர்த்திக்கும் புதுகரம்பு கிராமத்தை சேர்ந்த அவரது அக்காள் மகள் அம்பிகா (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்பு அம்பிகா கணவர் மூர்த்தியுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கரம்பில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அம்பிகா வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மூர்த்தி அம்பிகாவை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக புதுகரம்பு கிராமத்துக்கு வருவதற்கு சென்னையிலிருந்து கிளம்பி ஊருக்கு வந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

அவர் வருவதற்கு முன்பே அம்பிகா தனது தாய் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அம்பிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாப்பாரப்பட்டி போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் கவிதா விசாரித்து வருகிறார்.


Next Story