பரமத்தி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பரமத்தி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் தனபால் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (37). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

தனபால் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் தனபால் மது குடித்து விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

விசாரணை

இதில் மனமுடைந்த தனபால் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. கணவர் வீட்டுக்கு வராததால் பல்வேறு இடங்களில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். இந்த நிலையில் மாவுரெட்டி அருகே உள்ள சுடுகாட்டில் தனபால் தனது லுங்கியால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தனபாலின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதைனக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story